Monday, October 26, 2009

நீம் அஸ்திரா



நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ
நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்
வேப்பங்குச்சிகள் மற்றும்
வேப்ப இலை 10 கிலோ

இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.



2 comments:

Vetirmagal said...

குறிப்பை கண்டவுடன் செய்து பார்த்தேன்.

இந்த கரைசலை எத்தனை நாட்கள் வைத்திருக்க முடியும்?

தேவைக்கு அதிகமாக கலந்து விட்டேன்.

நன்றி.

விஜய் said...

@ வெற்றிமகள்

மிகுந்த நன்றி தங்களின் ஆதரவிற்கு

குறைந்த பட்சம் அறுபது நாட்கள் வைத்திருக்கலாம்.

நன்றி

விஜய்